To Advertise Contact - christmusicindia@gmail.com

Aachariyamae Athisayamae | ஆச்சரியமே அதிசயமே

Loading

பல்லவி
ஆச்சரியமே! அதிசயமே
ஆண்டவர் செயல்கள் ஆதி, பக்தரிடம்

சரணங்கள்

செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே – ஆச்சரியமே

ஏழுமடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச் சிங்க கெபியில்
தூதன் துணையால் காத்தனரே – ஆச்சரியமே

பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியா தன வாக்கினாலே
யோசுவாவின் வார்த்தையாலே
யேகும் சூரியன் நின்றதுவே – ஆச்சரியமே

மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
மா பெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே – ஆச்சரியமே

நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் – ஆச்சரியமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS