Aanandha Geethangal | ஆனந்த கீதங்கள்

Loading

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் ஏசுவை வாழ்த்திடுவோம்

புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரை பாடியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த

மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திக லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்கு பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த

மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த

அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்த்திடும் நாமமிதே – ஆனந்த

கருணை போங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம் முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் – ஆனந்த

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS