To Advertise Contact - christmusicindia@gmail.com

Aanandham Kolluven | ஆனந்தம் கொள்ளுவேன்

Loading

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இஎசுவிலே
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்

பல்லவி
நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த இதயமுடன்
ஆயுட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல மனதுடனே

இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் எம்மைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கின்றார்

சோர்ந்திடும் வேளைகள் எம்மை தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார்

கூப்பிடும் வேளைகள் நேச கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார்

பற்பல சோதனை எம்மை சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS