Aaviyaanavarae Analaay | ஆவியானவரே அனலாய்

Loading

ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
எல்லா ஆவியின் வரங்களோடு
பலமாய் இங்கு இறங்கிடும் இன்று

வானங்கள் இன்று திறக்கட்டுமே
அபிஷேக மழையே பெய்யட்டும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மறுரூபமாய் என்னை மாற்றிடுமே

பெந்தேகொஸ்தேநாளின் அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கட்டுமே
பலத்த காற்றின் முழக்கம் போல் – ஒரு
வல்லமை இங்கு வீசட்டுமே

அக்கினி மயமான நாவுகள்
எங்கள் மேல் வந்து அமரட்டுமே
ஆவியின் வரங்கள் யாவையுமே
வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே

கண்ணீர் கவலைகள் மறையணுமே
கட்டுகள் யாவும் உடையணுமே
அற்புதம் அதிசயம் நடக்கணுமே – நீர்
யார் என்று ஜனம் அறியணுமே

பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே
சாட்சிகளாய் எங்கும் வாழணுமே
எங்கள் சித்தம் மறையணுமே
தேவ சித்தம் நிறைவேறணுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS