Ayiram Ayiram Paadalgalai | ஆயிரம் ஆயிரம் பாடல்களை

Loading

ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே
யாவரும் தேன்மொழி பாடல்களால் – 2
இயேசுவைப் பாடிட வாருங்களே

அல்லேலூயா! அல்லேலூயா!
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லல் இல்லை அல்லால் இல்லை
ஆனந்தமாய் பாடிடுவோம்

புதிய புதிய பாடல்களை
புனைந்தே பண்களும் சேருங்களே
துதிகள் நிறைந்த கானங்களால் – 2
தொழுதே இறைவனைக் காணுங்களே

நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களாம்
மிஞ்சும் ஓசைத் தாளங்களால் – 2
மேலும் பரவசம் பாடுங்களே

எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்த ஆண்டுகளாய் – 2
சீயோனின் கீதம் பாடுங்களே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS