Azhaiththavarae Nadaththiduvaar | அழைத்தவரே நடத்திடுவார்

Loading

அழைத்தவரே நடத்திடுவார்
நம்பினவர் நானறிவேன்
நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே
நன்றியுடன் துதித்திடுவேன்

பச்சை மரம் உந்தனுக்கே
பாடுகளின் வழியானால்
பட்டமரம் எங்களுக்கே
பாருலகம் என்ன செய்யும்

குற்றமில்லா உந்தனையே
குறை சொல்லும் உலகமிது
குற்றமுள்ள மனிதனே நான்
குருவே உம் அருள் வேண்டும்

நம்பினவன் மறுதலித்தான்
நண்பனவன் சதிநினைத்தான்
நல்லவரைப் பகைத்துவிடும்
நன்றியில்லா உலகமிது

சிங்காசனம் விட்டுவந்து
சிலுவை மரம் சுமந்தவரே
நினைத்திடுவேன் உம்சிலுவை
சகித்திடுவேன் துன்பங்களை

ஜீவனையும் வெறுத்தவனே
ஜீவனதை அடைந்திடுவான்
சீக்கிரமாய் வந்திடுவீர்
சேர்ந்திடுவேன் உம் சமூகம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS