To Advertise Contact - christmusicindia@gmail.com

Bayappadaathe Paarilippothe | பயப்படாதே பாரிலிப்போதே

Loading

பயப்படாதே பாரிலிப்போதே
திகையாதே கலங்காதே
தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன்

தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும் போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே

இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே

உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும் காத்திடுவேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே

முந்தினதை நினைக்க வேண்டாம்
பூர்வமானத்தை சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே

ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தையும் தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே – பயப்படாதே

அல்லேலூயாவுக் கருகனும் நானே
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்லேலூயா பாடிடுவாயே
வல்ல கரத்தால் நடந்திடுவேனே – பயப்படாதே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS