Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே

Loading

பல்லவி
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட் செடி தன்னில் தோன்றிய தேவன்
பாது காத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே – தேவ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS