En Jeeva Payanaththile | என் ஜீவ பயணத்திலே

Loading

என் ஜீவ பயணத்திலே தேவா
உம் பாதமே சரணம்
பூலோக மீதினில் நீரேயல்லால்
யாரும் துணையில்லையே

மண்ணுலக பாவ இன்பங்களும்
மாயமாய் மறைந்திடுமே
மாறா உம் வாக்குகள் அனைத்துமே
நான் நம்பி பின் தொடர்வேன் – என்

பலவித சோதனை கஷ்டங்களும்
பலமாய் அனுகிடினும்
கலங்கின எந்தன் இருதயத்தை
அசையாமல் காத்திடுவீர் – என்

உந்தன் திவ்விய சந்நிதியிலே
பரிபூரண சந்தோஷமே
உம் திரு கரங்களின் தாழும் பெனக்கு
நித்திய ஆரோக்கியமே – என்

உம்மில் என் சந்தோஷத்தை நினைந்தே
நிந்தைகள் சகித்திடுவேன்
உந்தன் சிலுவையை நான் சுமக்க
உம் கிருபை ஈந்திடுமே – என்

சீயோனின் சிந்தையை நான் எப்போதும்
தரித்திட எனை நடத்தும்
மகிமையில் உம்மோடு நான் நிற்கவே
தேவா தயை செய்குவீர் – என்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS