என்னுள் பிறக்கும் ஒவ்வொரு ராகமும்
உம்மைப் போற்றுதே உம்மைத் துதிக்குதே
என்னுள் பிறக்கும் ஒவ்வொரு பாடலும்
உம் நாமம் உயர்த்துதே நம்பிக்கை ஊற்றுதே
pre-chorus
என் ஜீவனின் பெலனானவர்
என்றும் எனக்கு போதுமானவர் (2)
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
verse 1
வானமும் பூமியும் ஒழிந்தாலும்
உம் வார்த்தைகள் என்றுமே ஒழியாதே
திக்கற்ற சூழ்நிலை என்றாலும்
உம் ஒரு வார்த்தையாலே மாறிப்போகுமே
வழியே இல்லா இடங்களிலும்
உம் வழிகள் திறந்து ஆசிர்வதிப்பீர்
தடைகள் பல வந்து தடுக்கினாலும்
என் கால்கள் இடறாமல் காத்துக்கொள்வீர்
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
verse 2
எனக்கான உந்தனின் திட்டங்கள்
நன்மைக்கேதுவாய் பலன் தருமே
எனக்கெதிராய் எந்த ஆயுதமும்
வாய்க்காமல் எனை என்றும் காத்திடுவீர்
நீர் என் பட்சத்தில் இருப்பதினால்
நான் அசைக்கப்படுவதில்லை
நீர் எந்தன் மேய்ப்பரென்றால்
நான் தாழ்ச்சி அடைவதில்லை
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே
bridge
எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர்
எல்ரோஹி எனைக்காண்பவர் நீர் (2)
chorus
இன்றும் என்றுமே நீரே பாத்திரர்
துதி கனமெல்லாம் உமக்குரியதே
நீரே நல்லவர் சர்வ வல்லவர்
எல்லா மகிமையும் உமக்குரியதே

