Entha Neramum Eppothume | எந்த நேரமும் எப்போதுமே

பல்லவி
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை

அனுபல்லவி
இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப்போனாலும்
எனக் கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே – எந்த

சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவசித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே – எந்த

சிறுமைப் பட்டோரின் நம்பிக்கை
ஒருபோதும் கெட்டுப்போகாதே
தம்மைத் தேடுவோரை கர்த்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே – எந்த

ஒவ்வொரு ஆண்டும் முழுவதும்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத்தத்தம் தந்து நடத்துவார் – எந்த

குமாரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்வோம் – எந்த

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS