Enthan Naavil Puthupaattu | எந்தன் நாவில் புதுப்பாட்டு

Loading

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரைநான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் – ஆனந்தம்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதைக்காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS