Erusalaem En Aalayam | எருசலேம் என் ஆலயம்

Loading

எருசலேம் என் ஆலயம்
ஆசித்த வீடதே
நாள் அதைக் கண்டு பாக்கியம்
அடைய வேண்டுமே

பொற்றாளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன் ?
பலிங்கேத் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்

எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம் மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்

நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே

எருசலேம் என் ஆலயம்
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல்; என் அடைக்கலம்
எப்போதும் சேருவேன்?

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS