Iyesuvai Nambinor | இயேசுவை நம்பினோர்

Loading

சரணங்கள்
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

பல்லவி
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரை கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும் – நெஞ்சமே

விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் – நெஞ்சமே

இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
எகிப்பரந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கம்பீரமே உனக்குண்டே – நெஞ்சமே

ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றும் அழிந்திட விட்டு விடார்
தம் சமூகம் நித்தியா பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே – நெஞ்சமே

அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே – நெஞ்சமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS