To Advertise Contact - christmusicindia@gmail.com

Jeevanin Ootraame | ஜீவனின் ஊற்றாமே

Loading

ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்
தீர்த்திடுவார் உந்தன் தாகமதை
பாவங்கள், ரோகங்கள், சாபங்கள், போக்கிட
பரிவாய் அழைக்கிறார்

வல்லவரே இயேசு நல்லவரே
மிக அன்பு மிகுந்தவரே
இயேசு வல்லவரே அவர் நல்லவரே
உனக்காக ஜீவிக்கிறார்

ஆரு மற்றவனை நீ அலைந்தே
பாவ உளைதனிலே அமிழ்ந்தே
மாய்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர்
மந்தையில் சேர்த்திடுவார் – வல்லவரே

வியாதியினால் நொந்து வாடுவதேனோ
நேயன் கிறிஸ்து சுமந்ததனை
சிலுவையின் மீதினில் தீர்த்ததாலே – இனி
சுகமடைந்திடுவாய் – வல்லவரே

பரனின் அன்பதை அகமதிலே
சொரிந்து தன திரு ஆலயமாய்
மாற்றியே தம்மைப் போல் தேவசாயலாக்கி
மகிமை சேர்த்திடுவார் – வல்லவரே

வானமும் பூமியும் மாறிப் போயினும்
வாக்கு மாறாதவர் ஓர் வல்ல மீட்பர்
காப்பார் வழுவாது உள்ளங்கையில் வைத்தே
கலங்கிடாதே நீ வா – வல்லவரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS