ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்
எனக்கு என்ன கவலை
ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்
எனக்கு ஏது கவலை
இல்லை கவலை எனக்கு இல்லை கவலை
ஏது கவலை எனக்கு ஏது கவலை
அஞ்சாதே முதலும் முடிவும் நான் என்றதால்
எனக்கு ஏன் கவலை – 2
ஆபத்து காலத்தில் தப்புவிப்பேன் என்றதால்
பயமே எனக்கு இல்லை
வாக்கு மாறா வல்லவர் என்னோடிருப்பதால்
எனக்கு ஏன் கவலை – 2
சர்வ வல்லவரின் நிழலில் நான் உள்ளதால்
பயமே எனக்கு இல்லை
வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றதால்
எனக்கு ஏன் கவலை – 2
வழிகள் எல்லாம் என்னைக் காக்க தூதர்கள்
உள்ளதால் கலக்கம் ஏதுமில்லை
நித்தம் என்னை நடத்துவேன் என்று நீர் சொன்னதால்
எனக்கு ஏன் கவலை – 2
என் கிருபை போதும் என்ற வாக்கு இருப்பதால்
பயமே எனக்கு இல்லை
என்னை விசுவாசி அற்புதங்கள் காண்பாய் என்றதால்
எனக்கு ஏன் கவலை – 2
பரிசுத்தமாய் வாழ்ந்து பலர் பரத்துக்கு வரணுமே
அதுதான் எந்தன் கவலை