To Advertise Contact - christmusicindia@gmail.com

Jeevanulla Naatkalellaam | ஜீவனுள்ள நாட்களெல்லாம்

Loading

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பது ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம் – 2
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காய் நாம் வாழ்ந்திடுவோம் – 2 – ஜீவனுள்ள

இயேசுவும் தனக்காய் வாழாமல் – அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள

ஊழியம் செய்வது பாக்கியமே – அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் – ஜீவனுள்ள

யாரோ செய்யட்டும் எனக்கென்ன – நான்
நலமாயிருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா – ஜீவனுள்ள

உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS