To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaalai Thorum Karththane | காலை தோறும் கர்த்தனே

Loading

பல்லவி
காலை தோறும் கர்த்தனே – புது
கிருபையை தினம் போழிகின்றீரே – காலை

அனுபல்லவி
என் தேவன் நல்லவரே
மா தேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே – காலை

ஆழியின் அலைகள் ஓயாது போல
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே – காலை

ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன் – காலை

சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் – காலை

கனிமரமாய் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் – காலை

ஜாதிகள் நடுவில் உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர் – காலை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS