Kalvaari Anbai | கல்வாரி அன்பை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினாரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே

எம்மையும் உம்மைப்போல் மாற்றிடவே
உம் ஜீவன் தன்தீரன்றோ
எங்களை தரைமட்டும் தாழ்த்துகின்றோம்
தந்து விட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

error: Content is protected !!
ADS
ADS
ADS