To Advertise Contact - christmusicindia@gmail.com

Kan Kalangamal | கண் கலங்காமல்

Loading

கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்

நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளதிலிருந்து காத்தீரய்யா

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்

நறுமணம் வீசும் காணிக்கையாய்
பலியாகி அன்பு கூர்ந்தீர்
அது போல நானும் அர்பணித்தேன்
அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்

ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்
பிறர் அன்பில் நான் வளர்வேன்
உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி
துய்மை படுத்தும் நிச்சயமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS