கரம் பிடித்து வழிநடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா
பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
நாம் நடக்கும் பாதைகளை காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தினாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல் நம் வாழ்வை தொடருவார்
எந்தப் பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்