Karththar Enthan Meippar | கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
எனக்கொன்றும் குறைவில்லை
பத்திரமாய் எனைக்காப்பார்
அவரின்றி ஒருவரில்லை

பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னைப் போஷித்து
அமர்ந்த நீரூற்றண்டை அவர் என்னைச் சேர்ப்பித்து
சேதமின்றி ஆத்துமத்தை
நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார்

சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே
தேவன் வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே
ஜீவபரன் என்னோடிருப்பார்
அவர்தம் கோலும் அவர்தம் தடியும் என்னைத் தேற்றும்

பகைவர் முன்னே என்னை அவர் மேன்மைப்படுத்தி
நிகரில்லாத தைலம் பூசி என்னை உயர்த்தி
சாகும் வரை நன்மை தொடர
எசுதேவன் வீட்டில் நெடுநாள் நிலைத்திருப்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS