கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள் (2)
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்துங்கள்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
கர்த்தரே பெரியவர்
அவர் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் (2)
ஜனங்களுக்குள்ளே மகிமையைப்பாடி (2)
விவரித்துச் சொல்லுங்களேன் (2) – கர்த்தரைத்
கர்த்தர் வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் (2)
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் (2)
வல்லமை மிகுந்தவர் (2) – கர்த்தரைத்
கர்த்தரே நல்லவர்
நன்மையானதைச் செய்பவர் (2)
அல்லேலூயா பாடி ஆனந்தமாய்க் கூடி (2)
மகிமை செலுத்துவோம் (2) – கர்த்தரைத்