To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththarilum Tham Vallamaiyilum | கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

Loading

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
கிருபையாய் யாவரும் பலப்படுவோம்
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
திராணியுடன் போர் புரிவோம்

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்தானின் சேனை முறிததிடுவோம் – அவர்
சத்துவ வல்லமையால்

மாமிசம், ரத்தத்துடனுமல்ல
துரைத்தனம், அதிகாரம், அந்தகாரத்தின்
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
போராட்டம் நமக்கு உண்டு – சர்வா

சத்தியமாம் கச்சையைக் கட்டியே
நீதியின் மார்கவசம் தரித்தே
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் – சர்வா

பொல்லாங்க னெய்யும் அம்புகளை
வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்
விசுவாச மென்னும் கேடகம் மேலே
வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வா

இரட்சண்யமாம் தலை சீராவும்
எக்ஷனமும் அணிந்து கொள்வோம்
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
தேவை அதைப்பிடித்துக் கொள்வோம் – சர்வா

எந்த சமயத்திலும் சகல
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்
மன உறுதியுடன் ஜெபிப்போம் – சர்வா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS