To Advertise Contact - christmusicindia@gmail.com

Antho Kalvariyil | அந்தோ கல்வாரியில்

Loading

அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்

சரணங்கள்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ

அழகுமில்லை சௌந்தரிய மில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ

முள்ளில் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால்கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே – அந்தோ

அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ

சிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS