To Advertise Contact - christmusicindia@gmail.com

Aruvadai Miguthi | அறுவடை மிகுதி

Loading

அறுவடை மிகுதி ஆலோ இல்லை
அன்பரின் கதறல் கேட்டிடுதே

நானிலம் முழுவதும் நாநூறு கோடி
நாசத்தின் வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நன்மையையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் வாலிபரே

அமைதி இல்லை நம்பிக்கை இல்லை
அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே
உறக்கமும் முழு உணவில்லை
உணர்ந்திடுவீர் இதை வாலிபரே

மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை
வாதையில் வாட்டிடும் கூட்டத்தைப்பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினை காட்டவும் யாருமில்லை

நம்பிக்கையற்ற கல்லறை நாடி
நாளினில் இலட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார்

அலறிடும் பிள்ளைகளின் குரலினைக் கேட்டும்
அழுவதின்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவான் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ

அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன்
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையிலே
பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று
பாதத்தில் விடுவேன் ஜீவனையே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS