Athisayamaanavar Aalosanai | அதிசயமானவர் ஆலோசனை

Loading

பல்லவி
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
நித்திய தேவனே என் இயேசுவே

சோதனை புரண்டு என்மேல் உருண்டாலும்
சோர்ந்திடாதென்னை அணைத்திட்டாரே
ஜெய கீதம் பாடி துதித்திட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தானும் சீறினான்
யூதாவின் சிங்கம் பெலனீந்தாரே
ஆனந்த கீதம் பாடிடச் செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

துன்பம் தொல்லையும் கவலையும் வியாதியும்
தொடர்ந்து வந்தாலும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

நீரே என் கன்மலை நீரே என் அடைக்கலம்
நீரே என் நம்பிக்கை என் கோட்டையும்
உம்மை நம்பினோர் வெட்கப்படாததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS