To Advertise Contact - christmusicindia@gmail.com

Aththimaram | அத்திமரம்

Loading

அத்திமரம் துளிர்விடாமற் போனாலும்
திராட்சச்செடி பழம் கொடாமற் போனாலும்
ஒலிவமரம் பலனற்றுப் போனாலும்
நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (2)

வயல்களிலே தானியம் இன்றிப் போனாலும்
மந்தையிலே முதலற்றுப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (2) – அத்திமரம்

நதிகளிலே தண்ணீர் வற்றிப் போனாலும்
நாவறண்டு நான் மயங்கி வீழ்ந்தாலும்
உடலழிந்து உயிர் பிரிந்து போனாலும்
நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (2) – அத்திமரம்

வீட்டினிலே பணமின்றி போனாலும்
நிந்தனையும் துன்பங்களும் வந்தாலும்
தீமையான பொய்மொழி சொன்னாலும்
நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (2) – அத்திமரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS