To Advertise Contact - christmusicindia@gmail.com

Beththalaiyil Piranthavarai | பெத்தலையில் பிறந்தவரை

Loading

பல்லவி
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி மனமே – இன்னும்

சரணங்கள்
சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் – பெத்தலையில்

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டு தாழ்ச்சியுள்ள முன்ணையிலே – பெத்தலையில்

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS