Devanae Sthoththiram | தேவனே ஸ்தோத்திரம்

Loading

தேவனே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்
ஆயிரம் ஆயிரம் ஆசிகள்
அருள் மழைபோல் என்னில் பொழிந்தீரே

துன்பக் கடலை தாண்டிடும் நேரம்
துயரமாய் மாறி சோர்ந்திடும் வேளை
கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி
கணக்கில்லா ஸ்தோத்திரம் செய்திடுவேனே

சத்துரு என்னை சடுதியில் நெருக்கி
இல்லாமற் போக எதிர்த்திடும் பொது
இயேசுவே வந்து யுத்தமே செய்தீர்
சாத்தானின் தலையை நசுக்கி விட்டீரே

செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள்
சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள்
எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகிக்க
என் நெஞ்சை அன்பினால் நிறைந்திட செய்தீர்

ஈலோக இன்பங்கள் இடைவிடாதிழுக்க
பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க
உம்மைப் போல் ஜீவிக்க உத்தமர் இயேசுவே
உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS