To Advertise Contact - christmusicindia@gmail.com

Devane Naan Umathandaiyil | தேவனே நான் உமதண்டையில்

Loading

தேவனே நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் – தேவனே

யாக்கோபைப் போல் போகும் பாதையில் – பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா – தேவனே

பரத்திற்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

நித்திரையினின்று விழித்து – காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

ஆனந்தமாம் செட்டை விரித்து – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன் – தேவனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS