Ekkaalaththum Karththar | எக்காலத்தும் கர்த்தர்

Loading

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே

மண்ணின் வாழ்வும் மாயையாகும்
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவே (2)
மாறாத அன்பு என்றும் போதுமே – எக்காலமும்

அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே – எக்காலமும்

அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடத்திடுவார் – எக்காலமும்

தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடத்திட
தேவாவியானவர் உதவி செய்வார் – எக்காலமும்

முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை தரிசிப்பேனே – எக்காலமும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS