Em Uyarntha Vaasasthalamathuvae | எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

Loading

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே

அனுபல்லவி
கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் – இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்

ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம் – எம்

அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம் – எம்

மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம் – எம்

ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம் – எம்

வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே – எம்

வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம் – எம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS