To Advertise Contact - christmusicindia@gmail.com

En Aathumaave Kalangidaathe | என் ஆத்துமாவே கலங்கிடாதே

Loading

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே
வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும்

சரணங்கள்
பஞ்சம் பசியோ நிர்வாணமோ
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்
கொஞ்சமும் அஞ்சாதே
தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார்

உற்றார் உறவினர் மற்றும் பலர்
குற்றமே கூறித் திரிந்திடினும்
கொற்றவன் இயேசுன்னை
பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார்

நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்
வஞ்சகன் எய்திடும்
நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார்

வாழ்க்கைப் படகினில் அலைகள் மோதி
ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்
சூழ்ந்திடும் புயலை நீக்கி
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார்

மரணமே வந்தாலும் மருளாதே
சரணடைந்தால் தைரியம் தந்திடுவார்
அரணவர் ஆபத்தில்
திரனமாய் மதிப்பாய் உன் ஜீவனையே

துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய்
அன்பர் சென்ற பாதை அதுவே தான்
துன்பமே உன் பங்கு
துன்பமூலம் தேவ ராஜ்யம் செல்வாய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS