Enthan Vaanjai | எந்தன் வாஞ்சை

Loading

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்

பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்கப் பதினாயிரம் நாவு
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே – எந்தன்

மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே
மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே – எந்தன்

வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு
வனப்புடன் நிற்கும் சீயோனே
இயேசு ராஜாவின் சத்திய நகரமே
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே – எந்தன்

பரிசுத்தமே எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்த வான்கள் பல கோடி வாழும்
பரலோகமே இன்ப சீயோனே – எந்தன்

மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே
மணவாட்டியாம் என் மகிழ்ச்சி அங்கே
ஆயத்தப்படுத்தின உன்னிடமே
எப்போது நான் வந்து சேர்வேனோ? – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS