To Advertise Contact - christmusicindia@gmail.com

Jebavaelai Emakkaanantham | ஜெபவேளை எமக்கானந்தம்

Loading

பல்லவி
ஜெபவேளை எமக்கானந்தம் என்றும்
ஜெபமில்லா ஜெயமில்லை
ஜெபம் எங்கள் ஜெபமே

சரணங்கள்
இருள் சூழ்ந்தவனம் போன்ற இருண்ட கெத்சமனேயில்
இறுதி வேலையில் ஜெபித்தீர்
இரத்த வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவோ – அந்த
இரவெல்லாம் ஜெபித்தீரைய்யா – இந்த ஜெப

மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து – உம்
மகிமையை அளித்தீரைய்யா
அன்று போல உம் தரிசனம் எனக்கருளும் எங்கள்
அருமையான ஆண்டவர் ஏசையா – இந்த ஜெப

சரீரமோ பெலவீனம் ஆவியோ உயிர்ப்பிக்கும்
சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
அந்தி சாந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே நல்ல
அருள் ஆவிவரம் தாருமே – இந்த ஜெப

ஊர் ஆரான் இருவரும் கரங்களை சுமந்திட
ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
பக்தன் மோசேபோல் ஜெயம் பெற ஜெபித்திடவே
பரமனே கிருபை தாருமே – இந்த ஜெப

சிறைச்சாலை அடைபட்ட சீஷனை விடுவிக்க
சபையாரும் ஜெபித்தனரே
அன்று பேதுரு வெளிவந்த அதிசயம்போல் பதில்
அளித்தெங்கள் ஜெபங்கேளும் – இந்த ஜெப

உபவாச ஜெபமூலம் அகாஸ்வேரு ராஜனின்
உளமதைத் திருப்பினாளே
எஸ்தர் ராணி தன் ஜெபங்கேட்டு தயவடைந்தாள் என்றும்
எமக்குந்தான் தயை தாருமே – இந்த ஜெப

உயர் கர்மேல் மலைமீது ஜெபித்திடும் எலியாபோல்
துயருற்ற மகள் அன்னாள் போல்
தாசன் தானியேல் எனும் பக்தர் பலர் ஜெபித்த – அந்த
தனி ஜெப வரந்தாரும் – இந்த ஜெப

நினையாத நேரத்தில் திருடன் போல் வருகிறேன்
நிதம் நீங்கள் விழித்திருங்கள்
என்று போதனை அளித்தீரே அதைநம்பியே – வந்தோம்
எமக்குந்தான் பெலன் தாருமே – இந்த ஜெப

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS