Kaalainaeram Inba | காலைநேரம் இன்ப

Loading

காலைநேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு யேசு தினம் பேசுவார்

எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே – காலை

பலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல்
பொய்யாய்ச் சொன்னாலும் கலி கூறுவாய்
இதுவே உன் பாக்கியம் என் இயேசு சொன்னார்
இந்த மே வாக்கு நிறைவேறுதே – காலை

சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே – காலை

பறந்து புறாபோல் சிறகடித்தே
பாடிச் சென்றார் நான் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே – காலை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS