To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaalaiyum Maalai | காலையும் மாலை

Loading

காலையும் மாலை எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையால் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினமும் வாழ்ந்திடுவேன் – காலை

எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் – காலை

ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் – காலை

தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடி சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் – காலை

எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம்முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் – காலை

தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் – காலை

எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்கு மாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் – காலை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS