காப்பார் உன்னை காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் – அவர்
கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றுமதை எண்ணிப்பார்
மீட்கப்பட்டவர்க்கு வாக்குப்படி இன்பக் கானான்
அளிக்கவில்லையோ
இப்போ நினிவேயை நிர்மூலம் செய்வதென்று
பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ இல்லையோ இல்லையோ
பின் அன்பா யிரங்கவில்லையோ
வீழ்கையில் விழாதுன்னைக் காப்பதற்காய்
விரைவாய் வந்து சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டி இழுப்பவரும்
ஜெயமும் கணமும் சுகமும் இரக்கமாயுனக்களிப்பவரும்
தாயின் கட்டிலே உன்னைத் தனக்காய்த்தாம் தெரிந்தெடுத்தவரே
மாயை யிலாகா தாங்கியணைத்து மந்தையில் சேர்த்தவரே
அவரே அவரே அவரே
அன்பு கொண்டு மணந்தவரே
ஆதரவாய் பல ஆண்டுகளில் பரனடைக்கலமாயிருந்தார்
காவலுடனவர் கைப்பணி செய்திடக் கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்