Kaithatti Paadi | கைதட்டி பாடி

Loading

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்

களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

பயப்பாடாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்

நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்

ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே

வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழ்க்காமல் மேலாக்குவார்

பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்

உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை – எனவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS