Kalvaari Snegam | கல்வாரி சினேகம்

Loading

பல்லவி
கல்வாரி சினேகம் கரைந்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும் – 2

காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் தேகம்

இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
ராஜா உம் சினேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னைக் காணுவோர் உம்மைக் காணட்டும்

அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS