To Advertise Contact - christmusicindia@gmail.com

Kangalai Pathiya | கண்களை பதிய

Loading

கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தனையில் நிறுத்திடுவோம் – மனம்
சோர்ந்து போகமாட்டோம்

ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் – நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

பாவத்திற்கு எதிராய்
போராட்டம் நமக்கு உண்டு
இரத்தம் சிந்தும் அளவு
எதிர்த்து நிற்கவில்லையே

தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேற்றும் படிகளாகும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS