Karththar En Meipparaay | கர்த்தர் என் மேய்ப்பராய்

Loading

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே – நான்
தாழ்ச்சி அடியேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை – தம்
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார் – கர்த்தர்

மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும் நான்
எப்பெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே – கர்த்தர்

சத்துருக்கள் முன்பில் எனக்காகவே – அவர்
பந்தி யொன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரர் நிரம்பியே வழியச் செய்தார் – கர்த்தர்

ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும் – என்னை
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன் – கர்த்தர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS