Kuthoogalam Niraintha Nannaal | குதூகலம் நிறைந்த நன்னாள்

Loading

குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்

சரணங்கள்
தளகர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம்

புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மனவாட்டியைச் சேர்த்திடவே – குதூகலம்

ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிவிடுவோம் – குதூகலம்

ஜீவா ஒழி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதூகலம்

தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தோணி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் – குதூகலம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS