To Advertise Contact - christmusicindia@gmail.com

Naalaiya Thinaththaik Kuriththu | நாளைய தினத்தைக் குறித்து

Loading

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா

கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே
ஒழித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்கே நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS