To Advertise Contact - christmusicindia@gmail.com

Naan Aayaththamaanaen | நான் ஆயத்தமானேன்

Loading

பல்லவி
நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க
நித்திய மகிழ்ச்சி அடைவேன்
மத்திய ஆகாய மீதிலே
மன்னன் இயேசுவைக் காணுவேன்

மணவாளன் தட்டும் போது ஆயத்தமே
மங்கிடாதே என் விளக்குகளே
ஜீவச்சுடர் ஒளியாய் ஜொலிப்பேன்
தேவப்பிதா தங்கும் மாளிகையில் – நான்

சுபதின வெண் வஸ்திரம் ஆயத்தமே
சீருடனே நான் தரித்திடுவேன்
ஆட்டுக் குடியானவர் விருந்தில்
அன்பரோடே நானும் வீற்றிருப்பேன் – நான்

சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே
சேவையிலே நான் அணிந்திடுவேன்
இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே
இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன் – நான்

பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே
பாரினிலே என் இயேசுவுக்காய்
பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்
பேரின்ப ராஜ்யம் சேர்ந்திடுவேன் – நான்

எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே
என் அரும் இயேசு வருகிறாரே
ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன்
ஆவலுடன் எதிர்பார்ப்பேன் – நான்

பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே
பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்
அல்லேலூயா பாடி பறந்திடுவேன்
ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே – நான்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS