To Advertise Contact - christmusicindia@gmail.com

Naathan Aruliya Perum | நாதன் அருளிய பெரும்

Loading

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என்னுள்ளம் பொங்கி வழிந்திடுதே
நாவினால் பாடிபோற்ற நாட்கள் போதுமே
நல் பாதைதனில் தொடர்ந்தென்னை நடத்தியதால்

அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
அல்லேலூயா பாடிடுவேன்

இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையால் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்
நிந்தை துன்ப துயர நேரங்களிலும் உம்
நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் – அன்பின்

மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று
நீதியின் கனியாய் மகிமையில் துலங்க
நற்குல திராட்சைக் கொடியாய் உம்மோடிணைந்து
நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க – அன்பின்

மேலோகத்தில் உம்மையல்லாது யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
உம் ஆலோசனையின்படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக் கொள்வீர் – அன்பின்

ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கிறார் தங்கள் அறைகளிலே
தாரணியில் நானும் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்துமா ஆவியையும் ஒப்புவிக்கிறேன் – அன்பின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS