Nandriudan Thuthipaen – Joevin – Lyrics

Loading

நன்றி – 4 நன்றி என் தேவனுக்கு நன்றி
நன்றி – 4 நன்றி என் ராஜனுக்கு நன்றி

நன்றியுடன் துதிப்பேன்
நல்லவரே உம்மையே
நாளெல்லாம் பாடுவேன் என்றுமே (2)

அரணும் கோட்டையுமானீர் -எந்தன்
வாழ்க்கையில் நங்கூரமானீர் (2)
துயர நேரத்தில் என்னை தேற்றிடும்
தேற்றரவாளரானீர் (2) – எந்தன்

வழியும் வெளிச்ச்சமுமானீர் -எந்தன்
வாழ்க்கையில் ஜீவனாய் ஆனீர் (2)
குழியிலிருந்து என்னை மீட்டிட
எந்தன் அன்பின் மீட்பரானீர் (2) – எந்தன்

ஆதியும் அந்தமுமானீர் – எந்தன்
வாழ்க்கையில் நிரந்தரமானீர் (2)
உம்மை என்றும் துதித்திட
துதிக்கு பாத்திரரானீர் (2) – எந்தன்

மேகஸ்தம்பமாய் ஆனீர் இரவில்
அக்கினிஸ்தம்பமாய் ஆனீர் (2) – நீர்
என்னோடு என்றும் இருப்பதால்
இம்மானுவேலர் ஆனீர் (2) – எந்தன்

error: Content is protected !!
ADS
ADS
ADS