Paavaththin Baaraththinaal | பாவத்தின் பாரத்தினால்

Loading

பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால் ஏற்றிடும் இயேசுநாதா

கெட்ட குமாரனைப் போல் துஷ்டன் நான் அலைந்தேனப்பா
நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே

தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ
மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே

கள்ளானாயினும் நான் நீ பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா

தாய் தந்தை தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளென்னைத் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS