To Advertise Contact - christmusicindia@gmail.com

Pothumaanavarae | போதுமானவரே

Loading

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் – ஆராதனை

பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து – உம்
மகிமையிலே பங்கு பெறச் செய்தீர்

சிலுவையிலே எழ்மையானதால் – என்னை
செல்வந்தனாய் மாற்றீவிட்டீரே – நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS